Monday, February 27, 2012

என்ன சாப்பிட்டாய்  ?
நெல்லுச் சோறு -
நீ என்ன சாப்பிட்டாய் ?
சாதம்..
 
சொல்கையிலேயே 
முன்னது உதிரி உதிரியாய் 
நாவில் ஈரம் நனைப்பதாய்
உண்ண அழைப்பதாய் ... .
 
சாதமோ  சூடாய் 
விரல் ஒட்டுவதாய் 
நைந்து போனதாய் 
நா ஈரம் துடைப்பதாய்...
 
எனக்கு மட்டுந்தான்   இப்படியா ! 
 
----சந்திர கலாதர்   

No comments:

Post a Comment