15.02.2012.புதன் /மாசி 3/கர ஆண்டு
உதய கால நிகழ்வுகள்
&
உதய வேளை-
தூரத்து உயர்ந்து அகன்ற கட்டிடங்கள்
மறதியில் அமிழ்ந்த 'நிகழ்ந்தவை'போ
கடலில் தொலைவில் காணும் கப்பல்கள்போல்
எண்ணெய்க் குடுவை மூழ்கிய பொருட்கள்போல்
விளக்கங்கள் இழந்து விளிம்பு
எந்த இலக்குமே இல்லாது
சும்மா விருட்டென வான் எழுந்து
'படபட' வென ஓரிரு வட்டமிட்டு
கூட்டமாய் அழகாய் வழி சறுக்கி
உல்லாசம் ஒன்றுக்கே காலை தரும்
உற்சாகப் புறாக்களை என்ன சொல்வேன் !
கறுப்பின் அழகில் சந்தேகமோ?
'பளபள'க் கரிச்சான்கள் கண்ட பின்பு
'சுறுசுறு'க் கறுப்பினில் அழகு காண்பீர் !
குட்டிக்கரணம் அடிக்கும் 'ரெட்டைவால்'கள்
விசிறி 'றெக்கைகள்' விரித்துப் பாய்ந்து
போர்விமானம்போல் பறக்கக் காண்பீ
கூவும் குரலோ கொஞ்சும் மொழி !
எத்தனை முயன்றும் 'நகல்'மொழியில்
நெருங்கவே இயலாது தோல்வி கண்டே
அதன் பாடலில்தான் எத்தனை ஏற்ற இறக்கங்கள்!
திருப்பி மொழியாத் திறமும் தோற்க வைக்குது !
இந்தக் கறுப்பின் வடிவோ ஓர் விழி விருந்து !
எப்போதும் அவசரம் ! எப்போதும் நேர்கோடாய் !
'கீ..கீ..கீ' எனக் கத்திக்கொண்டே ஒர்நோக்காய்
காற்றைக் கிழித்துப் பறக்கும் பச்சைக் கிளிகள் !
ஆம், எங்கே போயின என் சிட்டுக் குருவிகள் ?
அதன் 'சிடு...சிடு' சொடுக்குகள் கேட்டு எத்தனை நாளாச்சு ?
இவை அனைத்தையும் அமைதியில் ரசிக்கும்
அழகாய் விடிந்த காலை வான்வெளி காண்!
---சந்திர கலாதர்
No comments:
Post a Comment