Wednesday, February 29, 2012

மலர்த்தும் வலி மரத்திற்கு இல்லையோ ?
 
&
 
மரம் மொக்குகளாய்
 
கருவுற்று நின்றது  -
 
இதோ இந்த இரவு நகர்வதற்குள்
 
புஷ்பித்துவிடும் --
 
மலர்த்தும் வலி என்ன
 
மரங்கட்கு  இல்லையோ ?
 
மகப்பேறின் வலிஅலறல் 
 
இரவின் சொட்டு அமைதியில் 
 
செவி சேர்ந்து 
 
கண்ணீர் கோர்க்கிறது-
 
காலை விடியலில்
 
கவலையாய் விரைகிறேன் -
 
ஓ ! கண் கொள்ளாக் காட்சி !
 
மரமே மலராய்
 
வண்ணமே மரமாய் -
 
என் மனமே பூவனமாய் !
 
கண்முன் வளர்ந்[த்]த மகளின்
 
முதல் மகபேறல்லவோ !
 
மரத்தின்  விழிகளில் 
 
மௌனப் பெருமிதம் ! 
 
 
 
------சந்திர கலாதர்

No comments:

Post a Comment