Monday, February 27, 2012

காதல் என்றும்  தனிமை தேடும்  
 
யாரும் இல்லாத தோப்பு
 
எவரும் பார்க்காத மறைவு-
 
உடலுள் உள்ளத்தையும் 
 
உள்ளத்துள் உடலையும் 
 
திணித்துப் பார்த்திட ஓர் துடிப்பு ;
 
அது ஓர் சொல்லமுடியாத தவிப்பு- 
 
பெருமூச்சுகள் சிறுமொழி பேசும் 
 
உலகே எதிர் விழியாய் வாட்டும் 
 
நேரமும் பகையாய்ச் சுருங்கும் 
 
சந்தேகம் சுற்றிப் பொழியும்
 
தலை சுற்றிக் கிறுக்காய் அலையும்
 
கைபேசி கண்ணையே வாங்கும் 
 
வீதியில் வருவோர் பட்டியல் எடுக்கும் 
 
இக்காதல் கல்யாணத்துள் கலந்தால் 
 
சே ..இத்தனையும் செத்துப் போகும் .
 
 
 
--சந்திர கலாதர்          

No comments:

Post a Comment