Saturday, March 3, 2012

இரு புள்ளிகள் இடையே 
 
மிகக் குறுகிய தூரம்
 
இணைக்கும் நேர்கோடே--
 
பல பொய்கள் புரட்டி 
 
மூடி மறைத்தாலும் 
 
இறுதியில் முளைப்பதோ   
 
உண்மை நேர்கோடே -
 
உண்மை நேர்கோட்டை 
 
வரைதல் கூடின் 
 
அதன்பின் நெஞ்சில்
 
ஏது கனம் ?
 
அதுபோல்  எழுத்திற்கு 
 
தேவையோ  அலங்காரங்கள் ?
 
வாடும் ஒப்பனை  
 
வனப்பை மறைக்கும் ;
 
மாயை சேர்க்கும் 
 
வாய்மையை  மிதிக்கும் ;
 
எளிமையின் வனப்பே 
 
உண்மையின் உன்னதம் -
 
காந்தியின்  எழுத்து  
 
எளிமையின் உச்சம்-
 
நிகண்டை நாடா 
 
சத்தியச்  சுவடுகள் !
 
எளிமை என்பது 
 
எளிதே அல்ல ! 
 
சத்தியம் நடக்கும் 
 
தனி வழிப்  பாதை !
 
 
 
-----சந்திர கலாதர்   

No comments:

Post a Comment