Saturday, March 3, 2012

ஒரு பிஞ்சின்  பிச்சை
 
&
 
கலைந்த சிகைவழி
 
கண்கள் கெஞ்சும் -
 
கிழிந்த உடைவழி
 
வறுமை வியர்க்கும் -
 
ஏந்திய கைகள்
 
ஏமாற்றம் பழகும் -
 
'இல்லை இல்லை!' 
 
செவியுள் குத்தும் --
 
'போ போ 'என்பதே 
 
நெஞ்சில் உதைக்கும்--
 
' அம்மா ! தாயே !'
 
எவர் நெஞ்சில் உறைக்கும் ?
 
 
 
---சந்திர கலாதர்   

No comments:

Post a Comment