Thursday, March 8, 2012

மாசி மாதப் பௌர்ணமியை நேற்றுக் காணாமற் போனேன் -


மாசி மாதம் ஓர்முறை ஆண்டாண்டு வரலாம்

மாசி மாதம் ,ஆனால் ,என் வாழ்வில் எத்தனை அறியேன் -

முழு நிலைவை இழந்தது என் பேரிழப்பே

எனக்காகக் காத்திருந்து ஏக்கத்தில் தேய்ந்து போகுமே !

குளிர் நிலவின் வெண்முகத்தில் கண்ணீர் பதித்தேனே !

இனி நாள்தோறும் இதற்கு ஈடாய் இதனைச் செய்குவேன்-

எழும் கதிரோன் விழும் பரிதி வளர் நிலவு மெலி நிலவு

தினம் காத்திருந்து தவம் இருந்து காற்றினில் கண் மூழ்கி

தொடு வானில் விழி பதித்து வண்ணமிடை 'வருக' சொல்லுவேன்  !



----சந்திர கலாதர்

No comments:

Post a Comment