Saturday, June 25, 2011

AS I FORGOT MYSELF , MISERIES UNSEEN !

என்னை மறந்ததால் கவலை காணேன் !
                 &&

ஒவ்வொரு நாளும்  

என் புத்தம் புது நாளே !

ஒவ்வொரு நொடியும்

என் புதுப் பிறப்பே!

புதுப்புது வார்த்தைகள்

தினம் தினம் கற்கிறேன்!

அறிமுகம் இல்லா  

அழகியகற்பனை

அந்தர வானில்

தாவிப் பிடிக்கிறேன்!

புதுப்புது உலகம்

தேடித் திரிகிறேன் !

என்னையே மறந்ததால்

கவலைகள் காணேன்! 

--சந்திர கலாதர்  

No comments:

Post a Comment