Monday, June 27, 2011

In Those Good Olden Days..!

அந்தக் காலத்தில் எல்லாம் ......!
 
டிவி யில் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பான 'பால் பாய்ன்ட்' பேனா ரீபில்கள் நான்கை ,ஏமாறக்கூடாது போலிகளால் என்ற தற்காப்பு உணர்வுடன் ,நம்பகமான கடையில் சென்று வாங்கினேன் .
நான்கையும் உறை கிழித்து எழுதத் தொடங்கியவுடன் அபாரமாய் எழுதத் துவங்கின
ஒரு நாளுக்குப்பின் எங்கோ சுநாதம்போல் அவற்றிற்கு மெல்லமெல்லத் துக்கம் தொண்டையைக் கவ்வ, சிறிது சிறிதாய் அவற்றின் உதடுகளில் இருந்து வார்த்தைகள் வறண்டு போயின .ஒவ்வொரு ரீபில்லும் ரூ2/50.
ஆத்திரம் உச்சமானது .
சரிதான்..அவைதான் போகட்டும்.--
இந்தச் சிறுவர்கள் தொல்லை தாங்காமல் ஒரு உறை சாதா ரீபில்ல்கள் [ அதாவது பத்து ]வாங்கி வந்தேன் ..அதுவும் உள்ளதில் சிறந்த நிறுவனமாகத் தேர்ந்து .!
இவை காசு குறைவானாலும் ,பட்டை தீட்டினாலும் கொடுத்த காசுக்கு ஏழைத் தொழிலாளிபோல் சிறப்பாக உழைக்குமே என்று எண்ணி அந்த வர்க்கத்தின் மீது அன்பு கொண்டு அவற்றை வேலைக்குச் சேர்த்தேன் !
ஒரு துண்டுக் காகிதத்தில் ' பொன்னேர் ' பிடித்து நல்ல நேரம் பார்த்து ஒரு ' மாதிரி 'க்காக உழுததில் அல்லது ' வெள்ளோட்டம் ' விட்டதில் நெஞ்செல்லாம் ' பச்சைப் பசேல் ' நம்பிக்கை நாற்றுகள் !
கொஞ்ச நேரத்திலேயே எல்லா வடிவப் பேனாக்கள் உள்ளும் அவற்றை மிக்க அன்புடன் நடவு நட்டேன் !
ஒரு நாளைக்கு எல்லாமே ' சூப்பர் ஸ்டாராய் ' எழுத்துக் கோலங்களைச் சிதறித் தள்ளின.
நெஞ்சே ' பளீர் பளீர் !'
இனிமே அந்த வெள்ளைச் சட்டைக்காரன் வேண்டவே வேண்டாம் என இடமுடிவு [spot decision ] எடுத்தேன்
மறுநாள் என் பசங்களிடமிருந்தெல்லாம் ஈனமாய்க் குற்றப் பத்திரிகைகள்.
" அப்பா ! எதுவுமே சரியா எழுதலைப்பா !"
"எங்கயாவது கீழ போட்டுத் தொலைச்சிருப்பீங்க ...உங்களுக்கெல்லாம் பென்சில்தான் லாயக்கு மடப் பசங்களா ! " என்று பூமாரி பொழிந்த என் பேனாவைச் சோதிக்கிறேன் ....அதே [ தோ ] கதிதான் !
ஆத்திரம் எல்லை மீறியது .
என்ன பயன் ?
ஆனால் என் மீது எனக்கோர் நம்பிக்கை ..
எந்த அழும் குழந்தையையும் தட்டிக்கட்டி சமாதானம் பண்ணிச் சிரிக்க வைத்து விடுவேன் ; குறைந்தது அந்த வீறலை விசும்பல் அளவுக்கு இறக்கி விடுவேன் ..' உம ' மூஞ்சிக் குழந்தையை, அதன் சந்தேகத்தை மெல்லத் திருடி ஒரு வார்த்தையையாவது வாங்கி விடுவேன் ; குழந்தைகள்தானே மிகக் கஷ்டமான கருவிகள் ..அவற்றையே எண்ணெய் போட்டு இயக்கிவிடக்கூடிய அபாரத் திறமை படிந்ததால் , என் நெஞ்சு இம்மாதிரி நேரங்களில் திக்குகளின் எல்லைவரை பெருமிதத்தால் விரியும் !
யாரும் பாராட்டாவிட்டால் நானே நெஞ்சை முதுகாக்கித் தட்டிக் கொள்கிறேனே !
குழந்தையை விடவா இச்சின்ன ரீபில்கள் மோசம் ?
இவற்றின் அடத்தைக் கடைந்துவிட மாட்டேனா ?
எனக்குள் சிறு எக்காளம் ! பப்..பப்..பப்..பம்.பம் !
சுற்றும் முற்றும் ஒரு வீரப் பார்வையால் ஒரு மெழுகு மெழுகுகிறேன் !
ரீபில்களை உருவிக் கொஞ்சுகிறேன் உள்ளங்கைகளிடை.!
'விறு விறு ' என்று ' அந்தக் காலத்தில் ' தயிர் கடைவார்களே ' அதுபோல் உள்ளங்கைகளிடை வைத்துச் சூடு பறக்கத் தேய்த்து உருட்டுகிறேன்.
இளகியிருக்குமா என் ஆசைக் கொஞ்சல்களில் ?
எழுதிப் பார்க்கிறேன்.
இரு வகையும் ' பேப்பே ! '
அடுத்து வேகமாய் விரல்களே உதிர்ந்து போகுமாறு உதறுகிறேன் .
டமாரக் குச்சிகள்போல்மேஜை விளிம்பில் அடித்துப் பார்க்கிறேன் .
கழுத்து புடைக்கும் வரை வாயில் வைத்து நாயனமாய் ஊதிப் பார்க்கிறேன் .
' அபஸ்வரம்' கூடவரவில்லை !
என்ன செய்வது ?
சின்னதாய் ஒரு அறுவை சிகிச்சை ..?
சின்னதாயா ?
அதன் தலையையே உருவி ,உள்ளே ஒரு சிறு கம்பிஇழையை விட்டு சீர்கெட்ட மூளையைக் குடைந்து வெளியேற்றி ,மறுபடி உள்நுழைத்து பின் பக்கமாய் ஊதி ...ம்ம்...ஹூம் !
என் கன்னங்களுக்குத்தான் இப்போது சிகிச்சை செய்ய வேண்டுமோ ?
வலியால் சிவந்து போச்சே !
ஒ...நானும் சிவப்பாக இப்படி ஒரு வழி இருக்கோ !
அடுத்து என்ன செய்வது ?
வெளிநாடுகளிலும் செய்யாத மருத்துவம் செய்து முதல் இந்தியனாய் ..சேச்சே ..என்ன புத்தி ?..உலகில் முதல் முதலாய் அதைச் செய்தவனாய்ப் புகழ் பெற ஆசை கொள்கிறேன் --
என் உடம்பா என்ன?என் பிள்ளைகள் உடம்பா அவை ?
சோதனைதானே !
விறுவிறுவென பழைய டப்பாக்களைத் தேடி ,பழைய , முன்பு நன்றாக எழுதிக் காலாவதியான, அந்த நிறுவனப் படைப்பான, 'அந்தக் கால ' ரீபில்களைத் தேடிப் பிடிக்கிறேன் .
இப்போது நான் செய்யத் துணிந்தது ' தலை மாற்றம் ' [head transplantation ]
இதயம்,கிட்னி மாற்றம் எல்லாம் அருதப் பழசாச்சே !
ஒவ்வொரு ரீபில்லுக்கும் சரியாக 'மாட்ச்' ஆகிற தலைமாற்ற சிகிச்சை நடைபெறுகிறது .
தலைமாற்ற்ம் கச்சிதம் !
சிறிது துணை சிகிச்சைகளுக்குப்பின் உயிரோட்டம் உள்ளதா என்று சோதிக்கிறேன் -
உண்டு ! வெற்றி !
எப்படி ?
உயிர் ஓட்டம் உண்டு !
ஆம்,..உயிர் ஓடி.. ..யே போய்விட்டது !
பழையபடி பழைய தலை மாற்றம் --
போன உயிரை எப்படியாவது..?..விடுவதா ?
எங்கே என் பெருமைகள் ? கர்வங்கள்?
கடைசியாக ஒரு முயற்சி -
இதமான வெந்நீரில் ஒரு அன்பான 'குளியல்' கொடுக்கிறேன் .
பின் விரல் பொசுக்கும் வெந்நீரில் துடிதுடிக்கும் ' அழுத்தத்தால் '-உயிரில்லாமல் துடித்து வளைந்தது ..
கதறலில்லாமல் இளகல்..
'மை ' இல்லை ..
இப்போது இளகியது 'மைப்பாண்டம்'
அதாவது அந்த ' பிளாஸ்டிக்குழல்'
ஆமாம்.. இந்தச் சிறந்த கம்பெனிகள் மைப்பசை செலுத்துவதற்குப் பதில் பென்சில் ஆணியைச் செருகி விட்டார்களோ .....
மறதியாய்..மறக்காமல் !
நேரம் பார்க்கிறேன் -
அறுபது நிமிடங்கள் செத்துக் காலடியில் !
அத்துடன் பதினான்கு ரீபில்களின் சடலங்கள் சித்ரவதைக்குள்ளாகி --
என் பசங்கள் சிரிப்பதற்குத் தயாராய் வாயைப் பொட்டலம் கட்டிக் கொண்டு ,எனக்குப் பயந்து நிற்கிறார்கள் !
" பரவாயில்லை ..சிரிங்கடா .சிரிங்க ! நான் என்ன செய்வது ? அப்படித் தயாரிக்கிறான்கள் ! இவங்க மேல 'கேஸ் ' போடப் போறேன் ..இப்பவும்தான் செய்யறானுங்களே ..பா...விங்க ! ' அந்தக் காலத்தில' 'ஸ்பெஷல் ' ரீபில் எப்படி எழுதும் தெரியுமா / " --அப்படீன்னு முடிக்கிறதுக்குள்ளே...
எட்டு வயசுச் சின்னப் பையன் சூரியதீப் சூரிய வெளிச்சம் போல ஒரு கேள்வி ரேகையை இறக்கினான் பாருங்க கள்ளமில்லா இயற்கையா ..!
" அப்பா! அப்பா ! ' அந்தக் காலம் ..அந்தக் காலம் ' ன்னு எப்பப் பாத்தாலும் சொல்லிண்டே இருக்கீங்களே அந்த ' அந்தக் காலம் ' எப்பப்பா முடிஞ்சி போச்சு ?"
இதுக்கு என்ன பதில் சொல்றது ?
நானும் ஒரு ' reynolds ' ரீபில்லாக் கீழே விழுந்துட்டேன் !
---சந்திர கலாதர்
[19. .11 . 1991 ]

Random Thoughts

எல்லா நிகழ்வுகளும் நாம் அறிந்தவைதான் ;

எல்லாமே நாம் உணர்பவைதான் ;

எல்லாமே நமக்குள்  மௌனமாய் சமைக்கப்படுவனதான்--

இருப்பினும் அவை சொல்லப்படுகின்றன ..கேட்கப் படுகின்றன..

எழுதப்படுகின்றன..விவாதிக்கப்படுகின்றன --

உணர்வுகள் எல்லோரும் அறிந்தவை ஆயினும் ,

அந்த உணர்வுகள் இயல்பானவை  ,சாதாரணமானவை ஆயினும்

எழுதுவதில் என்ன தவறு?

அவை எப்படி உணரப்பட்டன ?

எத்தகு சுவைபட எழுதப்படுகின்றன என்பதே முக்கியம் .

எனவேதான் சாதாரணமான எண்ணங்களில்

நான் பயணித்தவாறு எழுதப் போகிறேன்--

கவிதைகள்தான் எப்போதும் எழுதப்படவேண்டும் என்பதில்லை !

தன்னுள் பார்த்துச் சிந்திக்கும் அதே மனிதன் வேறு கோணங்களில் 

மற்றவர்களைப் பார்த்தும் சிந்திக்கிறான்--

தன்  வேடம் உரித்தவன் பிறர் வேடங்களுள் ஊடுருவுகிறான் ;

இங்கு "நான் " என்பது எல்லோரையும் குறிக்கும் ;

" நீங்கள்" என்பது சுற்றியுள்ள காரியவாதிகளை,

ஏமாற்றுப் பேர்வழிகளைக்  குறிக்கும் .

உலக நடப்புகளை எண்ணி ...

பதவி ,புகழ் மொய்த்த காலத்தில் 

சாக்கடை ஈக்களாய் தன்னை மொய்த்த சூழல் --

அவை அற்று அல்லது இற்ற நிலையில் எப்படி ஒதுக்கித் தள்ளப் போகிறது 

என்பதை அனுபவ வாயிலாக அனுதினமும் அறிந்த உள்ளம் ,தன்னைத்

தனிப்படுத்தி ,தனக்கு வெளியே நின்று

தன்னைப் பார்ப்பதும்   ,காரியவாதிகளைப் பார்ப்பதும் தவறல்லவே !

இது உள்ளத்தின் பிதற்றல்கள்தானே --

எனவே இவற்றிற்கு --

பூத்திடும் பிதற்றல்கள்    

நான்  சிரிக்கிறேன் --

எரிவாயு அடுப்புபோல் ..

மௌனமாய்...அழகாய் ...நீலமாய்

உதடுகளில் புஷ்பிக்கிறேன் --

ஒன்றும் அறியாத சிரிப்பல்ல இது --

ஏமாந்ததோ ..ஏமாற்றுவதோ ஆன

சிரிப்பல்ல இது --

உஷ்ணமாய்  விஷயம் அறிந்த

விழ நெளிவான சிரிப்புதான் --

வாழ்வின் நடப்புகளை

வேகவைத்துக் கொண்டிருக்கும் சிரிப்பு !

&&

நீங்கள் மிகையாகப் பாராட்டிப்  பொங்கி

முகப் பாண்டங்களில் வழிகிறீர்கள் --

மௌனமாய் என்னைக் காத்துக் கொள்கிறேன் --

உங்களை இறங்கிவிடக்

குரல் கொடுக்கிறேன் -

நீங்களே என்னில் வீழ்ந்து

கருகித் தீய்ந்துவிடலாகாது  அல்லவா !

அல்லது ...நானே  உங்கள் சுடு வெள்ளத்தில்

அணைந்துவிடலாகாது  அல்லவா ?

&&

உங்கள் பொங்குதலின்  உந்துதலின்...

காரிய வாதங்களின்  கொக்கரிப்புகளை

ஒன்றும் நான் அறியாதவன் அல்லவே !

நீங்களும் ஏமாறவில்லை -

நானும்  ஏமாறுவது இல்லை  !

இரண்டுமே இருவருக்குமே 

நன்றாகத் தெரியுமே !

என்ன சுகம் இந்த ஒருவரை ஒருவர் 

ஏமாற்றுவதாய்ப்  பாசாங்கு பாவனைகளில் !

கை கொடுத்துக் கொண்டே 

கத்தி செருகுவதாய் ...

சிரிக்கும் பற்களிடைப்  பசி வேகம் தெரிவதாய் .!    nnnnnn

&&

என் முன்  நின்று என் இருக்கைகளுக்கு

வான விற்கள் ஆவதை விட்டு விட்டு --

நான் வீசும் நாணய விளிம்புகளில் 

தடுமாறி ஆடுவதை ஒழித்துவிட்டு --

விழிகளில் வியாபாரங்களை  வரையாமல் 

என்று என்னுள் வாழும் அந்த மனிதனை மட்டும் 

பார்க்கப் போகிறீர்கள் ?

என்று அவனோடு கைகோர்த்து வரப் போகிறீர்கள் ?

அந்த மனிதனை எங்கோ தொலைத்துவிட்டு 

அவன் பூத நிழலோடு கைகுலுக்க 

ஏன் இப்படிப்  போட்டியிடுகிறீர்கள்  ?
         
------சந்திர கலாதர்
           [ 04.12.1991 ] 



Sunday, June 26, 2011

I want to tear my masks to be 'real I ' .

நக்ஷத்திரமாய்ப் பதவியிலோ ,பணத்திலோ,திரையிலோ அரசியலிலோ

'டால்' அடித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் ஒரு நிமிடம் பாராட்டு

மழைச் சொரிவில் 'சிந்தனை'க்குடை விரித்துத்  தன்னை நனையாது

பார்த்துக்கொள்ள விழைகிறான் --

அவனுக்குத் தெரியும் அவனையே பார்த்துக் கொள்ள ..!

அவனுக்குத் தெரியும் தன் முகங்கள் எத்தனை ?

தன் நாவுகள் எத்தனை ? தன் பயணங்கள் எத்தனை ?.என்பன எல்லாம் --

இது எல்லோர்க்கும் இயற்கைதானே ?

சர்வ சாதாரண நிகழ்ச்சி தானே  ?

இதை ஏன் எழுத  வேண்டும் ?--சிலர் கேள்வி இது .

இதற்குப் பின்னால் பதில் சொல்கிறேன் .

இப்போது எண்ணம் --

என்னைத் தேடி எனக்குள் பயணம் .

பாராட்டு முழக்கங்கள் வழுக்கும் வேளை --

என்னைத் தேடி என்னுள் ஒரு பயணம் ..

ஒவ்வொன்றாய் முகத்திரை ஒதுக்கிப் புகுந்து

மறந்த முக தரிசனம் மன ஆடி தேடுகிறேன் ;

உண்மைச் சிறு சுடர் உள் அறை உயிர்க்கிறேன்--

உண்மை முகம் நாடி ஒப்பனை உரிக்கையில் 

காலடி வீழும் வக்கிரச்  சருகுகள் கணக்கில கணக்கில !

ஒ !இத்தனை புழுங்கலில்  நாற்றமடிக்கிறேன் !

பொய்மை மேவிய புண்கள் இவையோ ?

                                       &&

போற்றும் குரல்களோ போதையாய்ச் செவிகளில் !

அற்புதன் ,அழகன் ,அண்ணன் ,மாவீரன் ,

வள்ளல் ,செம்மல்,இதய தெய்வம் என்பதாய்

மொழியைப் புரட்டிப் பொய்மையில் அமுக்கிச்

சொட்டச் சொட்ட ஊற்றிடும் போதை !

திக்குகள் திணறும் திகட்டும் லக்ஷார்ச்சனைகள் !

                                      &&

தாலாட்டெல்லாம் தட்டி விடுகிறேன் --

இதய  இமைகளை இழுத்து விரிக்கிறேன் !

இன்னமும் கூட உள்விழி முன்னே 

இத்தனை திரைகளா வரிசை விரிப்பன ?

                                      &&

பொய்யை இரையுண்டு பொய்க்கே  இரையாகி --

சேச்சே !ஒரு புத்தன் எழுகிறான் !

திரைகளைக் கிழித்து ஒப்பனை உடைத்து 

பொய்மையை அவிழ்த்து 

நிர்வாண உண்மையாய் நடந்து வருகிறேன் --

திரைகளின்  தீயில் பிழம்பாய் நின்ற நான் 

உண்மைச் சாம்பலாய் உயரப் பறக்கிறேன் ;

காற்றின் புனிதம் கலந்து திரிகிறேன் !

                                    &&

உலகே ! புகழ் மரியாதைகள் பொய்கள் பெறுகையில்

உண்மை உயிர்த்திட உளம் அஞ்சிடுதே !

ஏய்ப்பதில் ஒரு சுகம் !ஏமாற்றத்திலும் ஒரு சுகம் என

உன் சுழற்பாதை மாறும் நாள் என்றோ ?
  

-----சந்திர கலாதர்            
   

Saturday, June 25, 2011

WHAT IS TRUE DEVOTION ?

What is true devotion ?
He is a farmer
His means may not be much
Not highly literate
To know by heart
The hymns and compositions
Of great seers and sages
Or of religious poets
To roll out in animated devotion
In front of deities in temples
To exhibit his borrowed arrogance
And assume a halo
Demanding attention-
He is not in saintly attire
Nor with a flowing beard
That brings respect in its wake-
Humbly dressed
Crowded by his family--
He knows not the names
Of the many deities installed--
His only purpose is
To worship god
And to fulfill the vow
Taken  on a crisis--
Shaving heads of all dear ones,
Applying sandal paste liberally
And sacred ash all over forehead
Or other religious markings-
Lighting camphor cakes in plenty
At the courtyard of deities --
Simply praying with all devotion
Raising his closed palms heavenwards
With no demands made to God
Worrying the least huge expenditure
That may befall his meagre income--
Facing all the hostile conditions of travel,
Wait , push , rush and neglect--
Resting and sleeping in inhuman conditions--
All with a matchless patience
Cursing none and complaining to none
Thinking only of the sole purpose of pilgrimage !
While I,calculating every coin spent, 
And devotion taking a back-seat,
With my bloated ego
Of my might of learning
And memory of hymns
Stand speechless and wonder-struck
And clearly defeated by the intensity
And purity of devotion of simple souls
Sans songs and hymns on Gods
Soulfully addressing ,
'' O God,O Mother, O Father!"
And nothing else beyond these!
O God what use then
Of all my borrowed masterly prayers
When I realize with all my heart
True devotion requires none
Of borrowed mastery of language
To curry favour God
But only a deep-longing
And a burning faith sans anything
That reduces to ashes
All our rotting egos!
I held my head in shame
And set free all the hymns
I held captive in my mind by rote--
Thrashed the mean thought
That God could be bought
For glowing and glittering phrases!

---S.Chandra Kalaadhar

GOD SUDDENLY REMEMBERED ME !

God suddenly remembered me !
++
God was walking alone;
Suddenly HE remembered me-
"Where is the guy?
Not seen for a long long time!"
Dispatched a mild misery to me-
HE saw a man in the distance
Fast approaching ,beating his heart,
Lips aflutter chanting his name
And eyeful of begging tears!
God said ," he had come! "
With a twinkle in his eyes
And a smile snaking on lips!
---S.Chandra Kalaadhar

AS I FORGOT MYSELF , MISERIES UNSEEN !

என்னை மறந்ததால் கவலை காணேன் !
                 &&

ஒவ்வொரு நாளும்  

என் புத்தம் புது நாளே !

ஒவ்வொரு நொடியும்

என் புதுப் பிறப்பே!

புதுப்புது வார்த்தைகள்

தினம் தினம் கற்கிறேன்!

அறிமுகம் இல்லா  

அழகியகற்பனை

அந்தர வானில்

தாவிப் பிடிக்கிறேன்!

புதுப்புது உலகம்

தேடித் திரிகிறேன் !

என்னையே மறந்ததால்

கவலைகள் காணேன்! 

--சந்திர கலாதர்  

Friday, June 24, 2011

A SMALL LAMP IS ENOUGH !

A small lamp is enough!
Let there only be a small earthen lamp lit in me!
There need be no white-washing brightness--
My soul is put out by the brilliance;
And the ghosts of my lifeless body go berserk!
A small simple lamp is enough
To light graceful divinity in me!

---S.Chandra Kalaadhar.  

AM I A GOOD MAN ?

I am introduced as a 'good man!'
I suppress my surging laughter!
I and he must both be dishonest!
How dishonest I am is privy to me-
Sweet-layered poison I am!
Countless are my masks--
Get confused when to wear which!
My tongue licks the world
With titanic lies far exceeding waves!
I am a blend of all vices and virtues!
A mixture of all dirt and decorations;
Pleasing fragrances and offensive odours--
A melting cauldron of a variety of emotions;
The mirror threatens me with my own image!
Doubt at times whether I walk
With two or more legs,speak or whine;
I am clear you don't believe what he says-
Yet the wheel of this world
Has no other way to grind! 
Yes,I reflect in you
And you in me,is it not?

-----S.CHANDRA KALAADHAR